'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு |
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் விவகாரத்திற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைத்துறையுலகினர் போராட்டம் துவக்கி உள்ளனர். காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கும் இந்த போராட்டத்தில் ஏராளமான நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி அமைப்பினர் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் நடிகர்கள் விஷால், கார்த்தி, பொன்வண்ணன், சிவகார்த்திகேயன், சிவக்குமார், சூர்யா, செந்தில், பசுபதி, வையாபுரி, பிரசாந்த், பார்த்திபன், மன்சூர் அலிகான், தனுஷ், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, தம்பி ராமைய்யா, சக்தி, விக்ரம், விஜய் சேதுபதி, ரமேஷ் கண்ணா, விஜய் ஆன்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடிகைகள் ஆர்த்தி, குட்டி பத்மினி,ரேகா, தன்ஷிகா, பசி சத்யா, அம்பிகா, சத்யபிரியா, சி.ஆர்.சரஸ்வதி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.